HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தர்மம் செய்தால் மட்டும் போதுமா?

♥தர்மம் செய்தால் மட்டும் போதுமா?
♥பாத்திரமறிந்து பிச்சையிடு...' என்று ஒரு பழமொழி இருக்கிறதல்லவா? தானம் கொடுப்பது, பிச்சையிடுவது
என்பதெல்லாம் புண்ணியம் கிடைப்பதற்காக செய்வது. அதனால், நாம் கொடுக்கும் பணம், பொருள் எதுவானாலும், அது, எதற்கு பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தானம், பிச்சையெல்லாம், சத் பாத்திரத்துக்கு கொடு என்றனர்.

♥யாராவது ஒருவர் வந்து, கும்பாபிஷேகத்துக்காக பணம் கேட்டால், அவர் யார், நிஜமாகவே கும்பாபிஷேகம் நடக்கப் போகிறதா என்பதை தெரிந்து கொடுக்கலாம். யாராவது, கள்ளுக்கடை திறக்கப் போகிறேன்; அதற்கு உதவி செய்யுங்கள்...' என்று கேட்டால், அதற்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை. நாம் கொடுக்கும் பணம், புண்ணிய காரியங்களுக்கு பயன்பட வேண்டும்; பாவ காரியங்களுக்கு பயன்பட்டு விடக்கூடாது.

♥ஒரு ஊரில், ஒரு பணக்காரன் இருந்தான். அவனிடம் வந்து பிச்சை கேட்டான் ஒரு பிச்சைக்காரன். அவனுக்கு, ஒரு ரூபாய் கொடுத்தான் பணக்காரன். அதை வாங்கிப் போய், ஒரு மீன் பிடிக்கும் தூண்டில் வாங்கி, மீன் பிடித்தான் பிச்சைக்காரன். 

♥தூண்டில் மூலம் மீன் பிடித்து, விற்று கொஞ்சம் பணம் சேர்த்தான். பிறகு, அந்த பணத்தைக் கொண்டு, ஒரு மீன் பிடிக்கும் படகு வாங்கினான்.
படகில் போய் பெரிய மீன், சின்ன மீன் என்று நிறைய பிடித்து விற்றான்; அதன் மூலம் பணக்காரனாகி விட்டான்.
முக்கியமான தெருவில் ஒரு பெரிய மாடி வீட்டையும் வாங்கி, அதில் வசித்து வந்தான். 

♥இப்படியாக மீன் பிடி
படகுகளையும் நிறைய வாங்கி மீன் வியாபாரத்தில் முக்கிய புள்ளியானான்.
இவனுக்கு, ஒரு ரூபாய் பிச்சை போட்ட பணக்காரன், ஏழையாகி வந்தான். நாளடைவில், அவனது மாடி வீட்டையும் விற்க நேர்ந்தது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு, எல்லாமே போய் விட்டது. அவனே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டான். தெரு, தெருவாக போய் பிச்சை எடுத்தான்.

♥ஒரு நாள், மீன் வியாபாரியின் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டான். முன்பு ஒரு ரூபாய் பிச்சை வாங்கினவன் தான் இந்த மீன் வியாபாரி என்று தெரியாது. வாசலுக்கு வந்து பிச்சை கேட்டவனை பார்த்ததும் அடையாளம் தெரிந்து கொண்டான் மீன் வியாபாரி.
ஐயா... நீங்கள் ஏன் இந்த நிலைக்கு வந்தீர்கள்?' என்று கேட்டான். அதற்கு, அவன், என்னவோ
நான் செய்த பாவம். இந்த கதிக்கு வந்து விட்டேன்...' என்றான். அதற்கு அந்த மீன் வியாபாரி, ஐயா... என்னை தெரிகிறதா... முன் ஒரு சமயம் நான் உங்கள் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டேன். நீங்கள் ஒரு ரூபாய் தர்மம் செய்தீர்கள்... ஞாபகமிருக்கிறதா?' என்றான்.

♥ஞாபகப்படுத்தி, ஆமாம்... ஞாபகம் வருகிறது; ஆனால், நீ எப்படி இவ்வளவு பெரிய பணக்காரனாக முடிந்தது?' என்று கேட்டான். அதற்கு, நடந்த விஷயங்களை விவரித்தான். அப்போது தான், ஒரு ரூபாய் தர்மம் செய்ததின் தவறு அவருக்கு புரிந்தது. இந்த ஒரு ரூபாயைக் கொண்டு, எவ்வளவு மீன்களை பிடித்திருப்பான்; அவ்வளவு மீன்களை பிடித்து கொன்ற பாவம் அவனை சேராமல், என்னை சேர்ந்து விட்டது.
அதனால்தான் நான் இப்படி பிச்சைக்காரனாகி விட்டேன்... என்று மனம் நொந்தபடியே அடுத்த வீட்டுக்குப் போனான். 

♥நாம் செய்யும் தான, தர்மம் நல்ல காரியத்துக்கு பயன்படுகிறதா, பாவ காரியத்துக்கு பயன்படுகிறதா என்று கவனித்து கொடுக்க வேண்டும். அதனால்தான், பாத்திரமறிந்து பிச்சையிடு...' என்றனர்

Post a Comment

0 Comments