HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

திருக்கார்த்திகை தீபத் திருவிழா

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR

திருக்கார்த்திகை தீபத் திருவிழா


⭐ நமது நாட்டில் கொண்டாடப்படும் தெய்வத்திரு நாட்களுள் திருக்கார்த்திகையும் ஒன்று. 


⭐ பௌர்ணமி தினத்தன்று, சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கும்போது இவ்விழா கொண்டாடப்படுகின்றது. ஆதிகாலத்திலிருந்தே மக்கள் அக்கினியைத் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர். 


⭐ பஞ்ச பூதங்களுள் ஒன்றான அக்கினியை மகிழ்விப்பதே இப்பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.


⭐ நமது புராணங்களும் திருக்கார்த்திகை விழாவுக்கான காரணக்கதைகளை அழகாக வர்ணிக்கின்றன. 


⭐ திருக்கார்த்திகைக்குரிய தெய்வங்களான சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களை வழிபடும்படி கூறுகின்றன. 


⭐ தென் இந்தியாவில், திருவண்ணாமலை என்ற திருத்தலத்தில் உள்ள உயர்ந்த மலையின் உச்சியில் மிகப்பெரிய நெய்தீபம் ஏற்றி இறைவனை வழிபடுகின்றார்கள். இது அற்புதமான திருக்காட்சியாகும்.


திருக்கார்த்திகை வழிபாடு:


⭐ கார்த்திகை மாதம், பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கார்த்திகை விழா ஆரம்பமாகி மூன்று நாட்கள் கொண்டாடப்படுகின்றது. 


⭐ திருக்கார்த்திகைத் திருநாளில் அதிகாலை நேரத்தில் வீட்டை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்டி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். 


⭐ ஜோதியாகத் தோன்றிய சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும், கார்த்திகேயனையும் வணங்க வேண்டும். 


⭐ அன்றைய நாளில், தீபங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தீபமேற்ற உகந்த நேரம் மாலை வேளை என்பதால், மாலையில் அந்தி சாயும் நேரத்தில் வீடுகளில் தீபமேற்றி வழிபட வேண்டும். 


⭐ திருவிளக்கிலிருந்து அகல் விளக்குகளை ஏற்றி, அனைத்து அறைகளிலும், வாசலிலும் வைத்து, நம் இல்லத்தில் நிறைந்திருக்கும் தீப ஒளியையே இறைவனின் ரூபமாகக் கருதி வழிபட வேண்டும். குறைந்தபட்சம் இருபத்தியொரு தீபங்களாவது ஏற்றி வழிபட வேண்டும்.


⭐ பின்னர், தலைவாழை இலை விரித்து, அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, கார்த்திகைச் சிற்றுண்டிகளாகிய கொழுக்கட்டை, பொரி, பிரசாதங்களோடு, பழ வகைகளும் படைத்து, மாவிளக்கு ஏற்றிவைத்து, முதலில் பிள்ளையாரை வணங்கிப் பின்னர் இறைவனைப் பூஜிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments