HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

முதியோர்_இல்லத்து_ #முதியவரின்_முற்றிய_வலிகள்.! 😢 😭

#முதியோர்_இல்லத்து_
     #முதியவரின்_முற்றிய_வலிகள்.! 😢 😭

தவமிருந்துதான் பெற்றோம் 
உன்னை,
தடுமாறி வாழ்கை நடத்தியபோதும் 
தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட 
என் கன்னங்கள்
இன்னும் குளிருதாடா..!#மகனே...

உன் மழலை புன்னகையை 
பிச்சை கேட்டு 
பல நாட்கள் உன்னிடம் 
மண்டியிட்டிருக்கிறேன் ,
என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில் 
என் #பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய 
என் கன்னத்து தழும்பை 
இன்னமும் #முத்தமிடுகிறாள் 
உன் #அம்மா...!

என் கிழிந்த வேட்டியை 
மறைத்து,மடித்து கட்டி 
வேட்டி வாங்கும் 
பணத்தில் வாங்கியதுதான் 
உன் வெள்ளி பாலாடை...!
என் அன்பு மகனே..!

முதல் முறை 
நீ பள்ளி செல்லும்போது
உன்னை மருத்துவனாகதான் 
பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது 
கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை 
பார்த்தபோதுதான்,
உயிருடன் மோட்சமான 
முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது 
என் அன்பு மகனே...!

ஓர் இரவு,
வீட்டில் படுத்துவிட்டு 
விழித்து பார்த்தால்,
நானும் உன் தாயும் 
கிடந்தது 
"#முதியோர்_இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள் 
உதைக்க காத்திருந்த 
மார்பில்,
நீ உதைத்ததெப்படி..?
என் செல்ல மகனே..!
என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய் 
கொடுத்த #பால் 
#விஷமான_தெப்படி..?

என் மேல் சிந்திய 
உன் எச்சில் 
அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

#உயிரை கொல்பவன் மட்டும் 
#கொலைகாரன் அல்ல...
#உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை 
என் #உடல்_தாங்கும்...
என் #உள்ளம்_தாங்காது..

நான் தாங்குவேன் 
உன் தாய் 
தாங்கமாட்டாள்...!
பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!
வாரம் ஒருமுறை 
என் பேரப்பிள்ளைகளை 
கூட்டி வா..,
இவர்கள்தான் "#தாத்தா_பாட்டி"என்று 
அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",
என்று கூறி எங்களை 
உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து 
உன் பிள்ளைகள் 
வளர்ந்தால்தான்,
நீ எங்கள் நிலைக்கு 
வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன் 
என் செல்ல மகனே..!!!
#அனாதையாக எங்களை 
விட்டுவிடாமல்,
#முதியோர்_இல்லத்தில்...
சேர்த்தாயே...!!!

நன்றி மகனே 

என் மகன் நல்லவன்...!!! 😢 😭

Post a Comment

0 Comments